"வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் இன்று "ஏப்ரல் 12"


ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர்களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும். இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச்சிறுவர்களும் கொண்டாடிவருகின்றனர்.

சர்வதேசத்தில் உள்ள வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை - சுமார் 10 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு இல்லாததால், இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

பிறந்தக் குடும்பத்தின் மோசமான சூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை நீடிக்கிறது. 

வீதியோரச் சிறுவர்களுக்கு அடிப்படை உரிமை, பாதுகாப்பு, கல்வி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால் கடந்த 2011-ல் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் இந்தத் தினத்தை அங்கீகரித்து விழிப்புணர்வுக்கு வித்திட்டு வருகின்றன. எனினும், இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்காக, தொடர்ந்து உலக அளவில் பல அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் குழந்தைகளின் நலனுக்காக இயங்கிவரும் ஹெல்ப் லைன் 1098, வீதியோரச் சிறுவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இத்தகையச் சிறுவர்களைக் கண்டால், 1098-க்கு அழைத்துத் தகவல் சொல்ல மறந்துவிடாதீர்கள்!

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...